தூத்துக்குடியில் ஆம்னி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் -பிரேமலதா விஜயகாந்த் !

கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் ”தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளாளன்விளை ஆலய திருவிழாவிற்கு கோவையில் இருந்து சென்றபோது விபத்துக்கு உள்ளாகி திரு.கெர்சோம், மோசஸ், ரவி கோயில் பிச்சை, ஸ்டாலின் (குழந்தை), வசந்தா திருமதி.ஜெனிபர் எஸ்தர், சைனி கிருபாகரன், ஆகியோர் வரும் வழியில் பாபநாசம் அணையில் குளித்துவிட்டு கருங்குளம் வழி வரும் பொழுது பேய்குளம் அருகில் உள்ள 7பேருடன் கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து சென்றதில் இருவர் மட்டும் நீந்தி வெளியே வந்து இருக்கின்றனர்.

குழந்தை உட்பட 5பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது. அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts