பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் – அமைச்சர் ஜெய்சங்கர்!

பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஆபரேஷன் சிந்தூரின்போது பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது என்றும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் குறித்து மட்டுமே இருக்கும் என பிரதமர் மோடி மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது என்றும் பாகிஸ்தான் அரசு தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை மூட வேண்டும் என்றும் கூறினார்.

அதோடு, பயங்கரவாதத்திற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தானுடன் விவாதிக்க இந்தியா தயாராக இருக்கிறது என்றும் அந்த பேச்சுவார்த்தைகள்தான் சாத்தியமானவை என்றூம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts