10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 93.80 – அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு !

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அதன்படி 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 8 லட்சத்து 71,239 மாணவர்களில் 8 லட்சத்து 17,261 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.14 % கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 10,256 மாணவர்களும், கணிதம் பாடத்தில் 1,996 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடமும், தூத்துக்குடி மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளன