விருதுநகர் | இரண்டு இருசக்கர வாகனம்நேருக்கு நேர் மோதி இருவர் பலி !

அருப்புக்கோட்டையில் எதிரே வந்த வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கு வயது 23. காரியாபட்டியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர், இன்று காலை, புதிய இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்ய அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது ராகுல் ஒட்டிச் சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ராகுல் மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பாளையம்பட்டியைச் சேர்ந்த நாகபாண்டி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார், இரண்டு உடலைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts