பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் -வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதேவேளை, இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று மாலை 5 மணியளவில் அறிவித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தானுடனான போர் இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்படுவதாக ஒனிய அரசு அறிவித்தது. ஆனாலும், போர் நிறுத்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ராணுவ செயல்பாடுகளை நிறுத்த இருநாடுகளின் ராணுவ டைரக்டர் ஜெனரல் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தம் கடந்த சில மணிநேரங்களில் பாகிஸ்தானால் மீறப்பட்டது. எல்லையில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லையில் அத்துமீறல்களுக்கு பாகிஸ்தாந்தான் பொறுப்பு’ என தெரிவித்தார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts