ஜம்மு-காஷ்மீர் |செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளபெருகில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு !

ஜம்மு-காஷ்மீரில் தரம்குண்ட் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது.மேலும், 30 வீடுகள் சேதமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நதிக்கு அருகில் இருந்த தரம்குண்ட் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது.மேலும், 30 வீடுகள் சேதமடைந்தனர் .
மேலும், கனமழை காரணமாக பாக்னா கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கனமழை, வெள்ளத்தால் ரைசி மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றனது .