ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் !

ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 4.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளன.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகரமான டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டின் பேரிடர் குழு தெரிவித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.