திருச்சியில் மூதாட்டியிடம் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது !

திருச்சியில் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை இரண்டு பெண்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்துகிறது .
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெரியம்மாள்.இவர் இன்று மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசு பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது பேருந்தில் இருந்த இரண்டு பெண்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துள்ளனர். இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட திருடிய இரண்டு பெண்கள் தப்பிக்க முயன்றுள்ளனர்.
உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகிய இருவரும் தப்பித்து செல்ல முயன்ற இரு பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்,துரிதமாக செயல்பட்டு இரு பெண்களையும் மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுனர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.