டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயலால் மக்கள் அதிர்ச்சி !

டெல்லியில் திடீரென வானிலை மாற்றமாகி புழுதிப்புயல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது.

புழுதிப்புயலுடன் சேர்த்து லேசான மழையும் பெய்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலத்த காற்றும் வீசியதால் இரவு 9 மணிவரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இதனிடையே, அடுத்துவரும் சில மணிநேரங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.