கன்னியாகுமரி | மரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து !

திருவட்டாறு அருகே மரம் பாரம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இருந்து கோவில்பட்டிக்கு மரம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி திருவட்டார் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஓர்க்சாப் மற்றும் கடைகளின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், கடையின் முன் பகுதியில் விடபட்டிருந்த நான்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் உட்பட நான்கு வாகனங்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts