நியூயார்க் |சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை பற்றி நியூயார்க் மேயர் தெரிவிக்கையில்,உயிரிழந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்புபணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும்,இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானம் சுமார் 15 நிமிடங்கள் விண்ணில் வட்டமிட்டதாக விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், “வெஸ்ட் சைட் நெடுஞ்சாலை மற்றும் ஸ்பிரிங் தெரு அருகே ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால், சுற்றியுள்ள பகுதிகளில் அவசர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts