தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து 68 ஆயிரத்து 480ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கடந்த வாரம் இறுதியில் எதிர்பாராத வகையில் அதிரடியாக குறைந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து, 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து 68 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் சில்லரை வெள்ளியின் விலை 3 ரூபாய் உயர்ந்து 107 ரூபாய்க்கும், கட்டி வெள்ளியின் விலை 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply