IPL 2025 | மீண்டும் கேப்டனாக களம் இறங்கும் மகேந்திர சிங் தோனி உற்சாகத்தில் ரசிகர்கள் !

சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த போட்டியில் 10 அணிககள் பங்கேற்று வருகின்றனர்.
10 அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியது.

தொடர் தோல்வி காரணமாக ரசிகர்கள் தோனியின் மீதும் அணியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும்,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கேப்டனாக இருந்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் நிலையில், தோனி மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நாளை நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் மகிழ்ந்துவருகின்றனர்.
தோனி தலைமையில் சென்னை அணி, இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்கு கேப்டனாக இருந்தபோதும், அந்த அணி தோல்வியைத் தழுவிய நிலையில், கடைசிக்கட்டத்தில் தோனியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.