காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் !

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், வயது மூப்பு காரணமாக காலமானார்.
93 வயதான குமரி அனந்தன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்த பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
மேடைப்பேச்சில் மட்டுமின்றி எழுத்திலும் தீவிர ஈடுபாடு கொண்ட குமரி ஆனந்தன், இலக்கிய செல்வர் என பாராட்டப்பட்டவர்.
கடந்தாண்டு தமிழ்நாடு அரசு குமரி ஆனந்துக்கு, தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்திருந்ததுள்ளது .

குமரி ஆனந்தின் வாழ்க்கை பயணம்
- தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் கர்மவீரர் காமராஜருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
- காமராஜர் முன்பு போட்டியிட்ட நாகர்கோவில் தொகுதியில் 1977ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிவாகை சூடி நாடாளுமன்றத்தில் கால்பதித்தார்.
- நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகள் கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் அவையில் ஒலிக்க வேண்டும் என குரல் எழுப்பிய தமிழன்.
- 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், 1 முறை நாடாளுமன்ற எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2021ஆம் ஆண்டு தமிழக அரசு ‘பெருந்தலைவர் காமராஜர் விருது’ வழங்கி சிறப்பித்தது
- 2024ஆம் ஆண்டு தமிழக அரசால் ‘தகைசால் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்
*மேலும்,கலித்தொகை இன்பம், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் என 25-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்