குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – உச்சநீதிமன்றம் தள்ளுபடி !

13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செப் அறக்கட்டளை சார்பில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், நம் நாட்டில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை கட்டுப்பாடின்றி அணுக முடிவதால், அவை குழந்தைகளிடம் முன்னெப்போதும் இல்லாத மனநல நெருக்கடியை ஏற்படுத்துகிறது எனவும் குழந்தைகளிடையே மனச்சோர்வு, பதற்றம் அதிகரிப்பதற்கும், அதிகப்படியான சமூக வலைதள பயன்பாட்டிற்கும் நேரடி தொடர்பு இருப்பதை ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன எனவும் சமூக வலைதளங்களின் தொழில்நுட்பம் குழந்தைகளை அதிலேயே பல மணி நேரம் செலவிடும்படி அடிமையாக்குகிறது எனவும் இதனால் அவர்களின் கல்வி கற்கும் திறன், உளவியல் நலனும் சீர்குலைகின்றன. இதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களால் சிறுவர் – சிறுமியர் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர் எனவும் எனவே, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்றும் இதை பரிசீலிக்க விரும்பவில்லை எனவும் இது தொடர்பாக சட்டம் இயற்றச் சொல்லி ஒன்றீய அரசுக்கு கோரிக்கை வையுங்கள்’ எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.