மாநிலங்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா !

மக்களவையைத் தொடர்ந்து, கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

New Delhi, Apr 03 (ANI): Union Minority Affairs Minister Kiren Rijiju moves motion for consideration of Waqf (Amendment) Bill in Rajya Sabha during the Budget session of Parliament, in New Delhi on Thursday. (ANI Photo/Sansad TV)

இதைத் தொடர்ந்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் நேற்று வக்பு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதாவை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த விவாதத்தைத் தொடர்ந்து, மின்னணு முறையில் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இதனையடுத்து, வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts