இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி !

இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயம்பு வாழ்க்கை பத்திக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், இமாச்சல பிரதேச தலைநகர் குல்லுவில் உள்ள குருத்வாரா மணிகரன் சாஹிப் அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து,மீட்பு பணியில் அம்மாநில மருத்துவ குழுக்கள், போலீஸாா் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், மூன்று பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதை தொடர்ந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இமாச்சல் முதல்வர் சுக்வீர் மற்றும் எதிர்கட்சிகள் உட்பட அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலச்சரிவு குறித்து தகவல் தெரிவித்துள்ள இமாச்சல் முதல்வர் சுக்வீர், “ நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts