எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது !

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது.
வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16 ஆம் தேதி முதல் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை வேர்க்கோடு, மண்டபம், ராமேஸ்வரத்தில் இருந்து 466 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில் ஒரு படகில் சென்ற ஜேசு, அண்ணாமலை, கல்யாணராமன், சையது இப்ரஹிம், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்தது.
தமிழக மீனவர்கள் கைதுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும், மீனவர் பிரச்சினையில் நிரந்தத் தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.