தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் துணை ஆணையராக இருந்து தற்காலிக விடுப்பில் உள்ள பாண்டியராஜன் டிபிஎஸ் பட்டாலியன் எஸ்.பி.ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமினம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் நாமக்கல் எஸ்பியாக விமலாவும் வேலூர் மாவட்ட எஸ்பியாக மயில்வாகனனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையராக இருந்த தர்மராஜன் வேலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். மகேந்திர குமார் ரத்தோட் காவல்துறை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் சரக டிஐஜியாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜியாகவும் தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியாக இருந்த சாமுண்டீஸ்வரி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.