உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நிலயமானம் -திரவுபதி முர்மு உத்தரவு !

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்றத் நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் அமைப்பு கடந்த 26-ம் தேதி பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு செய்த இந்தப் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது