காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் உயிரிழப்பு !

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வீடுகள் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 21 பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் உள்ள ஒரு முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மத்திய காசாவில் உள்ள சலாஹுதீன் சாலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி லாரிகளுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, உணவுக்காகக் காத்திருந்தவர்களின் இறப்புகள் குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts