எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது !

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 14பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையும் அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் விசாரணைக்குப் பிறகு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் இன்று அதிகாலை மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 9 பேரை கைது செய்தனர்.

அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். ஒரே நாளில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts